Wednesday, March 16, 2005

நெஞ்சை உலுக்கும், குருதியை உறைய வைக்கும் அனுபவம்

எங்களுடன் பணியாற்றும் செய்தியாளர் ஒருவரும் நானும் செய்தி சேகரிப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றி ருந்தோம். வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரை சந்தித்து உரையாடி விட்டு அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தோம். அப்போது அம்புலன்ஸ் வண்டி ஒன்று அபாய ஒலியை எழுப்பியவாறு முகப்பு வெளிச்சம் போட்ட வாறு மிகவேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் வேறு இரண்டு வாகனங்களும் முகப்பு வெளிச்சம் போட்டவாறு வந்து கொண்டி ருந்தன. என்ன சம்பவம் நடந்திருக்கும் என்று சிந்தித்தவாறு நாங்கள் மீண்டும் வைத்திய சாலைக்குள் போய் அம்புலன்ஸ் வண்டியைப் பார்த்தோம். அதைப்பார்த்தவுடன் திகைத்துப் போனோம். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஆறுக்கும் அதிகமானவர்கள் நனைந்த நிலையில் தலைமுடிகள் எல்லாம் கற்சல்கள் செருகிய நிலையில் அலங்கோலமாக இருந்தார் கள். என்ன சம்பவம் என்பதை அறிவதற்காக முயன்றேன். எவரும் பேசக்கூடிய நிலையில் இல்லை. அவர்கள் அனைவரும் "ஐயோ என்ர பிள்ளையள்" எண்டு கதறியழுது கொண்டி ருந்தனர். இந்த நிலையில் என்ன சம்பவம் நடந்தி ருக்கும் என்பதை அறியமுடியவில்லை. அம்புலன்ஸ் சாரதியிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். "கடல் பெரிசா பெருகி கனசனம் கடல லோட அடிபட்டு போட்டுதுகள்" என்றார். உடனடியாகவே நானும் சக செய்தி யாளனும் எங்கள் மோட்டார் சைக்கிளில் வடம ராட்சி கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் எல்லாமே முகப்பு வெளிச்சம் போட்டவாறு காயமடைந்தவர் களை வைத்திய சாலைப்பக்கம் நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தன. அதை எல்லாம் பார்த்தபோது விளைவு பெரிதாக இருக்கும் என்று நினைத்து இன்னும் வேகமாக பயணித்தோம். ஒருவாறு புதுக்காட்டுச் சந்தியை சென்ற டைந்தபோது அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதறிக்கொண்டிருந்தனர். அதையும் தாண்டி வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் கரைக்கு சென்று விட்டோம். முன்னர் நாங்கள் போனபோது இருந்த கட்டடங்கள் எதுவுமே இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. பிரதான வீதியை தவிர உள்வீதிகள் எங்குமே செல்லமுடியாமல் இருந்தது. வீதி எங்கிருந்தது வீடு எங்கிருந்தது ஒன்றுமே தெரியவில்லை. எல்லாம் சுடுகாடு போல இருந்தது. இந்த நிலையிலும் ஆங்காங்கே கிடந்த சடலங்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு மீட்புப் பணியாளர் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பகுதிகள் எல்லாம் பார்க்கமுடியாதவாறு சிதைந்துபோய் இருந்தது. கடல் அடியில் தவறவிட்ட தமது உறவுகளை தேடி கதறி அழுது கொண்டிருந்தனர் பலர். இவை எல்லாவற்றையும் பார்க்க எனக்கு தலை சுற்றியது. குண்டுவீச்சுகளில், வீதி விபத் துக்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தான் பார்த்திருப்போம். இப்படி பெருமளவான சடலங்களை ஒரு நாளும் பார்த்ததே இல்லை. இப்படியே மருதங்கேணி வைத்தியாசலைக்கு போனோம். அங்கே உயிரிழந்தவர்களின் உடல்கள் அலங்கோலமான நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் அருகில் ஒரிருவர் இருந்து புலம்பி அழுது கொண்டிருந் தனர். சிலர் இறந்து போன தங்கள் பிள்ளை களை தூக்கி மடியில் வைத்து முத்தமிட்டு அழுது கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகளை பார்க்க முடியாமல் இருந்தது. எங்கும் மரண ஓலம் காதை கிழித்துக் கொண்டிருந்தது. இப்படி இருக்க மீட்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் "முல்லைத்தீவுப் பக்கம் சரியான இழப்பு" என்ற செய்தியை சொன்னார். அதை கேட்ட உடனேயே நாங்கள் இருவரும் 12.20 மணியளவில் முல்லைத்தீவை நோக்கி பயணிப்பதற்காக வடமராட்சி கிழக்கு தாழையடியில் இருந்து புறப்பட்டு புதுக்குடியி ருப்புச் சந்தியை சென்றடைந்தோம். புதுக்குடியி ருப்புச் சந்தி எங்கும் சனம் வெள்ளமாக அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தனர். புதுக்குடியி ருப்பு வைத்தியசாலையை சென்றடைந்தோம். வைத்தியசாலை எங்கும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை பணியாளர்களுடன் போராளிகள் மற்றும் தொண்டர்கள் என பெருமளவிலானவர்கள் இணைந்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். வைத்தியசாலை நிறைந்து வழிந்த சம்பவம் அதன் நீண்ட கடுமையான வரலாற்றில் அன்றுதான் நடந்திருக்கும். முல்லைத்தீவு பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு இறந்தவர்களின் சடலங்கள் எதுவும் 1.30 மணிவரை வரவில்லை. அப்படியே நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்ந்து முல்லைத்தீவுக்கு செல்கின்ற வட்டுவாகல் பாலத்தை சென்றடைந்தோம்.பாலத்திற்கு அங்கால் எவ ரும் செல்லமுடியாது என அந்தப் பகுதியில் கடமை யில் நின்ற காவல் துறை உறுப்பினர் எங்களை மறித்து விட்டார். அவருக்கு நாங்கள் ஊடகவியலாளர்கள் "உள்ளுக்கு போக வேணும்" என்று கூறினோம். அதற்கு அவர் அண்ணா "கடல் திடீர் எண்டு அடிக்குது அதாலதான் மறிக்கிறம். உங்கால போறது ஆபத்து" என்றார். நாங்கள் விடாப்பிடி யாக நின்று கதைத்தபோது அவர் மேலதிகாரி யுடன் தொடர்பு கொண்டு கதைத்த பிறகு எங்களை "அவதானமாக பார்த்துப் போங்கள்" என்றார். ஒருவாறு அனுமதி பெற்று பாலத்தடிக் குப் போனோம். பாலத்தை பார்க்கவே பயமாக இருந்தது. நாங்கள் எத்தனை தடவை பயணித்தி ருப்போம். பாலத்தின் கீழ் பாறைகள் தான் தெரிந்தன. இப்போது பாலத்தின் விளிம்பில் முட்டியவாறு கடல் அடித்துக் கொண்டிருந்தது. வட்டுவாகல் பாலத்தின் ஒரு கரையில் பெரிய பனைமரங்கள், பற்றைகள் என்றெல்லாம் வந்து அடைந்து கிடந்தன. மொத்தத்தில் பாலத்தின் ஒரு கரை விளிம்பில் புதிதாய் காடு வளர்ந்த மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் பாலத்தின் பலபாகங்களில் வெடிப்புக்கள் இருந்தன. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு போக பாலத்தில் இரண்டு இடங்களில் ஐந்தடி அகலம் இருக்கும் உடைந்த நிலையில் மண் மூட்டைகளாலும் கல்லுகளாலும் அடைக்கப்பட்டிருந்தது. கடல் அடித்தவேகத்தில் பாலம் உடைந்திருக்க வேணும் பிறகு மீட்பு பணியாளர்கள் அதை சீர்செய்திருப் பார்கள். இப்படியே பாலத்தில் நின்று பார்க்க கடல் அலை குமுறி அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இந்தப் பாலத்தை தாண்டிப் போனபிறகு கடல் பெருகிவந்தால் நாங்கள் திரும்பி வரமுடியாது. அதை நினைக்கும்போது மனதில் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்ன நடந்தது என்பதை அறியவேண்டும் என்பதற்காக உள்ளே போய்விட்டோம். அப்படியே செல்வபுரம் கின்னத்தங் காட்டு கிறவல் பாதையால் போகலாம் என்று போய்கொண்டிருந்தபோது கடற்கரை பக்கத்தில் இருந்த வீடுகள் எதையுமே காணவில்லை. கிரவல் வீதி பெரிய வாய்க்கால்களாய் உடைந்து போய் இருந்தது. ஒரு கட்டத்துக்கு அங்கால மோட்டார் சைக்கிளில் போகமுடியாதபடி இருந்தது. மக்கள் நடமாட்டம் எதுவும் இருக்க வில்லை. மீட்பு பணியாளர்கள் தான் தனியாக நின்று சடலங்களை எடுத்து ஓரிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தனர். அந்தச் சடலங்களில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாமே கிடந்தது. அதைப்பார்த்திட்டு மீட்பு பணியாளர்களிடம் பேசினோம். "தப்பி இருந்தாக்கள் எல்லாரையும் எடுத்திட்டம் இப்ப செத்துக்கிடந்த உடலங்களை எடுக்கிறம்" என்றார். அந்த கிரவல் வீதியால் பயணிக்க முடியாமல் போக வட்டுவாகல் பாலத்துக்கு திரும்பிவந்து சுத்திப்போற தார் வீதியால் முல்லை நகரப்பகுதிக்கு போய்க் கொண்டிருந்தம். முல்லைத்தீவு விளையாட்டு மைதானத் தடிக்கு போறத்துக்கு கொஞ்சம் முன்னுக்கு தார் றோட்டெல்லாம் பெரிய கிடங்காய் கிடந்திச்சுகடல இருந்து முக்கால் மைல் தூரத்தில இருக்கிற இந்த பாதைக்கே இந்த நிலை எண்டால் உள்ளுக் கிருந்த சனங்களுக்கும் அவயின்ர வீடுகளுக்கும் என்ன நிலைமை என்பதை ஊகித்துக் கொண் டோம். அப்படியே விளையாட்டு மைதான வளவடிக்கு வர மைதானம் முழுக்க வெள்ளக் காடாய் இருந்தது. கடல்ல இருந்து சின்னாத்துப் பாலத் தால வாற தண்ணி அப்படியே ஒரு தடையும் இல்லாமல் வந்து றோட்டை மேவிப்பாஞ்சு மைதானத்தால அங்கால போய்க்கொண்டி ருந்தது. அந்த தண்ணி இரண்டடி உயரத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு அதையும் கடந்து முல்லைநகரை சென்றடைந்தோம். எனக்கு தலை சுற்றியது. இதயம் நின்றுவிடும் போல கிடந்தது. அந்தளவுக்கு எல்லாமே கல்குவியலாக இருந்தது. எந்தக் கட்டடமும் இல்லை. மரங்கள் எல்லாம் வேருடன் சாய்ந்து போய் இருந்தது. ஐஸ்வான் லொறிகள் எல்லாம உருண்டு பிரண்டு போய்க் கிடந்தன. எதையும் பார்க்க இயலாமல் இருந்தது. இரண்டு புதிய பெரிய பேருந்துகள் பிரண்டுபோய் இருந்தன. பேருந்துக்குள் எல்லாம் கஞ்சல்கள் குவியலாய் கிடந்தது. அப்படியே முல்லைத்தீவு கடற்கரையில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தடிக்குப் போவ தற்கு முயற்சித்தோம். கடல் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்பு மட்டும் தான் இருந்தது. வேறு எதையும் காணவே இல்லை. கடல் கரையில் சிறிய வீடு கட்டி கனக்கச் சனம் இருந்தது. அதுகள் இருந்த இடமே தெரியாமல் தண்ணி நின்றது. மீட்புப் பணியாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் இருந் தும் தண்ணிக்குள்ள இருந்தும் உடலங்களை தூக்கி கொண்டிருந்தினம். அந்தப் பகுதி எல்லாம் வாழ்ந்து திரிந்த அந்த மக்கள் பனை வடலியளுக் குள்ளும் இராணுவமுட் கம்பிகளுக்குள்ளும் சிக்குப்பட்டும் செருகுப்பட்டும் கிடந்தார்கள். இப்படி எங்க பாத்தாலும் இறந்த உடல்கள். ஒரு தாய் தனது பிள்ளையுடன் நுளம்பு வலைக்குள் சிக்குப்பட்டுப் போய் சடலமாக கிடந்தார். மீட்பு பணியாளர்கள் எல்லாப் பக்கத்தாலையும் சடலங் களை தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஏதோ வித்தியாசமான நரக உலகத்தில் நிற்கிறோம் என்பது போல இருந்தது. நேரம் 4.45 மணி "கடல் திரும்பவும் வேகமாய் வந்து அடிச்சுப் போட்டுது தண்ணி வந்து கொண்டிருக்குது ஓடுங்கோ" என்று மீட்புப் பணியாளர்கள், எல்லாரையும் அனுப்பிக் கொண்டு தாங்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்களுடைய மோட்டார் சைக்கிளை இயக்கினோம். அது இயங்கமறுத்து விட்டது. இப்ப என்ன செய்யிறது பாத்துக் கொண்டு இருக்க கடல்பெருகிவந்து கொண்டிருந் தது. இப்ப என்ன செய்யிறது? எங்கள் கால்களை தடவின மாதிரி தண்ணி தடவிக்கொண்டு எங்களை தாண்டிப்போனது. நானும் சகபணியா ளனும் மீட்பு பணியாளர்களும் சேர்ந்து மோட்டார் சைக்கிளையும் தள்ளிக்கொண்டு ஆபத்தான பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்து விட்டோம். அதற்கு பிறகு ஒருத்தரையும் போகவிடவில்லை. அந்தளவுடன் ஆபத்தான சாக்களத்தில் இருந்து மீண்டு புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்கு வந்து வாட்டுக்குள் போனோம். இரண்டு பெரிய நீளமான வாட் முழுக்க இறந்தவர்களின் சடலங் கள் நிரலாய் அடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில் லாமல் இன்னும் உழவு இயந்திரங்களில் வந்து இறங்கினபடியே இருந்தது. நேரம் இரவு 7.00 மணியாகிவிட்டது. சடலங்களால் குவிந்து போய் இருந்த வாட்டுகள் இரண்டுக்குள்ளும் பெருமள வானவர்கள் குவிஞ்சு நிண்டு தங்கட பிள்ளை களையும், உறவினர்களையும் என ஒவ்வொன்றாய் தேடிக்கொண்டிருந்தார்கள். சிலர் இனங்கண்ட சடலங்களுக்குள் நின்று கதறி அழுது கொண்டி ருந்தனர். பார்க்க பயங்கரமாய் இருந்தது. இந்தளவுடன் நிறுத்திவிட்டு அலுவல கத்தை வந்தடைந்தோம். அங்கு வந்ததும் இந்த கோரத்தை மனித அவலத்தை எல்லாம் எப்படி செய்தியாக்குவது என்பதே தெரியாமல் இருந்தது. அந்தளவுக்கு கண்டசம்பவங்கள் என்னை வெகு வாக பாதித்திருந்தது.

0 Comments:

Post a Comment

<< Home