Wednesday, March 16, 2005

சுனாமியால் திறந்தவெளிச் சாக்காடாகிய ஆசியா !

செய்தி ஊடகத்துறையினரின் அறவியல், ஒழுக்கவியல் பற்றி பேசுகிறபொழுது ஐரோப்பாவுக்கு அமெரிக்காவுக்குமுரிய அறமும், ஒழுக்கவிய லும் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவிற்கும் செல்லு படியாகாதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்வியை ஆராய்வதற்கு கடந்த ஒரு தசாப்த காலத்துள் செய்தி ஊடகத்துறையி னரின் அதீத கவனத்தை ஈர்ந்த மூன்று சம்பவங்களை ஒப்பிடவேண்டியுள்ளது.
1997 செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற டயானா- டோடி ஜோடி சந்தித்த கார் விபத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியூயோர்க் இரட்டைக் கோபுரத்தின் மீது நடைபெற்ற தற்கொலை விமானங்களின் தாக்குதல், 2004 டிசம்பர் 26இல் ஆசிய நாடுகளை உலுக்கிய சுனாமிப்பேரழிவு ஆகிய மூன்று துயரச் சம்பவங் களின் போதும் அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்கள் நடந்துகொண்டவிதம், வகுத்துக் கொண்ட அறம், ஒழுக்கம் இவை பற்றி கவனிக்க வேண்டும். 9/11 நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து ஆறு மாதங்களின் பின்பு ஒரு சி.பி.எஸ் ஆவண நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று அத்தாக்குதலில் எரிந்து செத்துக்கொண்டிருந்த பெண்ணின் படத்தை தணிக்கை செய்தது. அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசை யொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், "அக்காட்சி மிகக் கொடூரமானது. அதைக் காட்சிப்படுத்து வதில்லை என்று முடிவு செய்தேன். எவராவது பார்க்க விரும்புகின்ற ஒன்றாக அது இருக்க வில்லை" என்றார். அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த மிகமோச மான அப்பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் செய்தி ஊடக வலைப்பின்னல் குறிப்பிடத்தக்களவு சரியான முறையையே பின்பற்றின. செய்திகளை வழங்குவதில் மானிட உணர்வுகளை மதித்தல், பாதிக்கப்பட்டவரின் அவலங்களையும் துயரங் களையும் மரியாதையுடன் அணுகுதல், அந்தரங் கங்கள், தனிப்பட்ட இரகசியங்களை காப்பாற்றும் அடுத்தவரின் விருப்பத்தை மீறாது நடத்தல் ஆகியவை பேணப்பட்டன. ஆங்கில மொழியிலே அவ் விடயங்களை அசோக் மலிக் எனும் ஊடக ஆய்வாளர் பின்வருமாறு கூறுகிறார்".................. 'ளுநளேவைiஎந உடிஎநசயபந', 'சநளயீநஉவ கரட டிக எiஉவiஅள' 'nடி எiடிடயவiடிn டிக யீசiஎயஉல': வாந ரெணண யீhசயளநள கடநற வாiஉம யனே கயளவ". 2004 டிசம்பர் 26ஆம் திகதிவரை இவற்றை நம்பக்கூடியதாக இருந்தது. 9/11 நியூயோர்க் தாக்குதலையடுத்து தொலைக் காட்சித் திரையில் அதில் கொல்லப்பட்டவர்களின் ஒரு சடலம் கூட காட்டப்படவில்லை. இச்சம்பவத் தின் கோபுரத்தை எதிர்காலத்தில் யாரேனும் பார்க்க விரும்பினால் கூட அதற்கான பதிவுகள் இல்லை. ஆனால் ஆசியாவின் சுனாமி மேற்படி அறங்கள், ஒழுக்கங்கள் எதுவும் செல்லுபடி யாகாத `திறந்த வெளிச் சாக்காட்டுக் களமாகி விட்டது'. டிசம்பர் 28ஆம் திகதி இரவு, சி.என்.என். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொலைக் காட்சி சேவை இலங்கை, தமிழ்நாடு, தாய்லாந்து ஆகிய பிராந்தியங்களில் சுனாமியால் இறந்தவர் களின் உடலங்களை அடுக்கடுக்காக வரிசை வரிசையாகக் காட்டியது. குழந்தையின் சடல மொன்றை ஒருவர் தூக்கிச் செல்வதையும் அதை வாங்குவதற்கு உறவினர்கள் விரைந்து செல்வதை யும் காட்டியது. இது தமிழ்நாடு அழிவுக்களமாக இருக்க வேண்டும். இறந்தவர்கள் உயிரோடு இருப்பவர் களைவிட மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதே மானிட தர்மம். இறந்தவர்கள் உயிரோடு இருந் திருந்தால் தாம் அவ்வாறு குலைந்த, கலைந்த அரையும் குறையுமான கோலங்களுடன் தொலைக் காட்சிக்காகப் படம் பிடிப்பதற்கு விரும்புவார்களா? ஆனால் சீ.என்.என். அதைச் துச்சமென மதித்து படம்பிடித்துக் காட்டியது. இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் தலைநகர் பன்ட ஆச் சேயின் சுனாமி அழிவுக் களத்துள் நிவாரணப் பணியாளர்கள் இறந்தவர் களை கால்களிலும், கைகளிலும் பிடித்து இழுத்துத் தாக்குவதையும் `கொற கொற' வென இழுத்து வருவதையும் தொலைக் காட்சியில் காண்பிப்பதற்கு ஏற்ற அமைதிப் பண்போ கௌர வமான அணுகுமுறைகளோ இல்லாதவகையில் சீ.என்.என். காட்டியது. வரிசை வரிசையாக சடலங்களையும் காட்டியது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பி.பி.சி., சீ.என்என்.ஐவிட மிகச் சிறியளவு திருத்தமாகச் செயற்பட்டது. 28ஆம் திகதி இரவுச் செய்தியறிக்கையில் துயரத்தால் நிலைகுலைந்த கணவனும், மனைவியும் மடிந்து போன தமது பிள்ளைகளைத் தூக்கிச் செல் வதைக் காட்டியது. பி.பி.சி இக்காட்சி ஆச்சே மாகாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுதான். இதன் மூலம் அரிவைச் சந்தித்த அக்குடும் பத்தினரின் உறவுகளின் துயரத்தை அதன் தனிப்பட்ட தன்மையை (பசநைஎந in யீசiஎயஉல) அந்த ஊடக நிறுவனம் மதிக்கத் தவறிவிட்டது என்று தான் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார் ஊடகத்துறை ஆய்வாளர் அசோக் மலிக். 1997 செப்ரெம்பரில் டயானா டோடி காதல் ஜோடிகளைப் பின்தொடர்ந்து சென்று, நடந்த விபத்தை அண்மையாக நின்று படம் பிடித்த பிரெஞ்சு செய்தியாளர்களை (பிரெஞ்சு மொழியில் செய்தியாளரை' (யீயயீயசயணணi' என்று அழைப்பர்) வைதுகொட்டிய மேற்கத்தய செய்தி யுலகம், ஆசியாவின் சுனாமிப் பேரழிவில் "பப்பராசித் தனமாகத்தான் நடந்து கொண்டது. சி.என்.என். சர்வதேச ஒளிபரப்புப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ் கிரேமர் என்ன கூறுகிறார் என்பதை அசோக் மலிக் வெளியிடுகிறார்" உலகத்தின் உங்கள் பகுதியில் நடைபெறுவது பெருங்கேடாகும். இறுதித்தொகை 100,000ஐ நெருங்கலாம். பாரியளவில் நிகழ்ந்த ஒரு இயற்கை அனர்த்தமே இது. விளக்கமாகவும், விரிவாகவும் செய்தித் தெரிவிப்பை நாங்கள் மேற்கொள்ளாவிட்டால், ஒரு செய்தி நிறுவனம் என்ற வகையில் நாங்கள் அசட்டைத்தனமாக இருந்ததாகவே முடியும்" என்று கிறிஸ் கிரேமர் சொன்னாராம். 9/11 நியூயோர்க் தாக்குதல் சம்பவத்தி லும் சுனாமி அனர்த்தத்திலும் சடலங்களை காட்சிப்படுத்தியதில் பாரிய வேறுபாடு இருந் தமை பற்றிக் கேட்கப்பட்டபோது 9/11 தொடர்பாக நாங்கள் இறந்த உடல்களைக் காட்டவில்லை யென்றால் அதற்கான காரணம் காட்டுவதற்கு உடல்களின் காட்சிகள் இருக்கவில்லை. உடல் கள் கருகிச் சாம்பலாகிவிட்டன என்றிருக்கிறார் சி.என்.என் இன் சர்வதேச ஒளிபரப்புப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர். 9/11 தாக்குதலுக்கு பின்னர் சி.என்.என். துயருற்ற குடும்பங்களின் தனிப்பட்ட விபரங் களுக்கும் அந்தரங்கங்களுக்கும் மதிப்புக் கொடுத்திருந்தது. ஆனால் இப்போது சுனாமி யையடுத்து அவ்வாறான அணுகுமுறை இருக்க வில்லையே என்று சொல்லப்பட்ட போது "நாங்கள் முற்றிலும் சரியானவர்கள் அல்ல, ஆனால் நாங்கள் தனிப்பட்ட அந்தரங்கங்களை மதிப் பதற்கு எப்பொழுதும் முயற்சிக்கிறோம். மரணத் தின் பின்னரான கௌரவத்தையும் மரியாதையை யும் வாங்க முனைகிறோம். படங்களை ஒளிபரப்பு வது என்பது கயிற்றில் நடப்பது போன்றது" என்று கிறிஸ் கிரேமர் கூறினார். சுனாமி செய்தி சேகரிப்பு, படங்களை ஒளிபரப்பியமை தொடர்பாக பி.பி.சி தனது கருத் தைக் கொண்டிருக்கிறது. பி.பி.சி. தென்னாசியப் பிரிவின் தலைமையதிகாரி போல் டானர் எமது செய்திக் கதைகளை உணர்ச்சி மயப்படுத்துவதற் காக சடலங்களை நாங்கள் காட்டவில்லை இவ் விடயத்தில் அனர்த்தத்தின் அளவை வெளிக் கொணர்வதற்கு சில சடலங்களைக் காட்ட வேண்டித்தானிருக்கிறது" என்று கூறுகிறார் என்பதை தெரிவித்துள்ளார் அசோக் மலிக். "கண்டிப்பான செய்திப்பீட கொள்யை" பி.பி.சி கொண்டிருக்கிறது என்று டானர் வலியு றுத்திச் சொன்னார். "பிரிட்டனிலோ அல்லது அயர்லாந்திலோ அல்லது இந்தியாவிலோ எங்கே என்றாலும் இறந்த உடல்களைக் காட்டுகின்ற போது கண்டிப்பான கொள்கையை கடைப் பிடிக்கிறோம். செய்தியின் பகுதியாக இறந்த உடல்களைக் காட்டவேண்டிய தேவையிருந்தால் காட்டுவோம். ஒளிப்படக் களஞ்சியங்களில் பேணப்படும் காட்சிகள் எனும் வகையில் திரும்பத் திரும்ப அவற்றை பி.பி.சி ஒளிபரப்புவதில்லை. ஒரு கார் விபத்தை எடுத்துக் கொண்டால் உருக் குலைந்த உடல்களை நாங்கள் காட்டுவதில்லை. மடிந்து போன சிறுவர்களின் உடல்களையும் நாங்கள் காட்டுவதில்லை என்றும் அவர் பி.பி.சி. நிலைப்பாட்டை கூறுகிறார்.

க. வேல்தஞ்சன்

0 Comments:

Post a Comment

<< Home