Wednesday, March 16, 2005

உதயனின் சுனாமி செய்தி வழங்கல் எப்படி அமைந்தது?

"யாழ்ப்பாணத்தில் எந்தச் சம்பவம் நடந்தாலும் உடனடியாகவே சனம் எங்களிடம்தான் விசாரிக்கும். அன்று காலை 10.20 மணி. திருகோணமலையிலிருந்து அழைத்த ஒருவர், கிழக்கு மாகாணத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டு யாழ்ப்பாணத்தில் அவ்வாறு ஏதும் அனர்த்தம் நிகழ்ந்ததா என்று கேட்டார். இது வடமராட்சியில் மட்டுமல்ல, வடக்கு -கிழக்கு முழுவதிலும் நடந்துள் ளது என்பதை அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டோம். வடமராட்சியை சுனாமி தாக்கிய சில நிமிடங்களில் எமக்குத் தகவல் சொல்லுவதற்காகப் பல வாசகர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்கள். உடனே எமது அலுவலகச் செய்திப் பிரிவைச் சேர்ந்த எஸ்.வசந்தன், எஸ். அற்புதராஜ் ஆகியோரைப் படப்பிடிப்புக் கருவிகளு டன் வடமராட்சிக்கு அனுப்பிவைத்தோம். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பணியாற்றுங்கள் என்றும் செய்திகளுடன் வந்து சேருங்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் கூறியிருந்தோம்......." என்று உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சுனாமி செய்தி வழங்கல் பற்றிய கதையை ஆரம்பித்தார். அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகேசு குமாரதாஸன். "எமது வடமராட்சி செய்தியாளர்களான சுந்தரலிங்கம், தில்லைநாதன், வடமராட்சி கிழக்குச்செய்தியாளர் குமார் ஆகிய மூவரும் சுனாமி பாதித்த இடங்களில் பிரசன்னமாகி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந் தோம். திரு. சுந்தரலிங்கம் பாதிப்புப் பற்றிய பல செய்திகளையும் புகைப்படங்களையும் தொடர்ந்து வழங்கிவந்தார். அவரது திறமையான பங்களிப்புக் காரணமாக அவரை எமது அலுவலகச் செய்தி யாளர்கள் `சுனாமி சுந்தா' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்...." என்று எமக்கு அருகில் பணியில் மூழ்கியிருந்தபடி பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அவர்கள் சிரித்துக்கொண்டு கூறினார். செய்தி சேகரிப்பதும், எமக்குச் சேர்ப்பிப் பதும் உடனடியாகக் களத்துக்குச் செல்வதும் என்ற பரபரப்புடன் அவர் பணியாற்றியதை விசேடமாகக் கூறலாம் - என்றும் திரு.கானையில்நாதன் அந்தச் செய்தியாளரைப் பாராட்டினார். அதனால் ஏனை யோர் பின்னுக்கு நின்றார்கள், அல்லது பிந்திப் போனார்கள் என்றல்ல-எனவும் தெரிவித்தார். வடமராட்சியிலிருந்து உதயன் சிறப்புச் செய்தியாளர் குழுவின் செய்தி அறிக்கையிடலை ஒரு பக்கத்தில் மறுநாள் பிரசுரித்தோம் என்றும் அவர்சுட்டிக்காட்டினார். தீர்மானகரமான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கைகளுக்குக் கிடைத்தவுடன் ஒரு விசேட மாலைப் பதிப்பை நீங்கள் வெளியிடவில் லையே என்று நான் கூறியபோது, "இரவு 11.30 மணிக்குத்தான் விடயங்களை ஓரளவு உறுதிப் படுத்த முடிந்தது. இழப்புகள், சேதங்கள் பற்றிய செய்திகள் கைகளில் குவியலாக இருந்தபோதும் ஓர் உத்தியோகபூர்வ தகவலாக அதைக் காட்டுவ தற்கு வழிவகையிருக்கவில்லை. அந்நிலையில், ஒரு மாலைப் பதிப்புப் பற்றி எங்களால் யோசிக்க முடியவில்லை. சரியாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஒரு பக்கமிருக்க, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேடபதிப்புமூலம் எவ்வகையில் உடனே உதவிசெய்ய முடியும் என்ப தையும் பார்க்கவேண்டும். எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டு அழிவும் சாவும் என்று நிலைமையி ருக்கும்போது, எமது அலுவலகப் பணியாளர்கள் கூட வடக்கு - கிழக்கில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தபோது விசேட பதிப்பு யாருக்கு யாரால் வழங் கப்படுகிறது என்ற நிலைமையை விளங்கிக் கொள்ளவேண்டும். அதனால் நாம் விசேட பதிப்புக் குறித்துச் சிறிதும் சிந்திக்கவில்லை. அப்போதைய நிலையில் அது அவசியமற்றது என்பதே எமது கருத்தும் முடிவுமாக இருந்தது - என்று சொன்னார் பிரதம ஆசிரியர். "எங்களைப் பொறுத்தவரையில் எதை எப்படிச் செய்வது என்று திணறிக் கொண்டிருக் காமல், சனத்தின்ரை கடைசி நிமிட அனுபவத்தை யும் முடியுமான அளவுக்குச் சரியான அளவில் இழப்புகளையும் பதிவுசெய்யத் தீர்மானித்தோம். வடமராட்சி கிழக்கில் அவ்வேளையில் நின்று கொண்டிருந்த அரசஅதிபரைக்கூடத் தொடர்பு கொள்வது மிகச் சிரமமாக இருந்தது..." என்று விளக்கினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன். "26ஆம் திகதி மதியத்திலிருந்து இரண்டு அலுவலகச் செய்தியாளர்களை யாழ். மருத்துவமனையில் நிலைகொண்டு விடயங்க ளைச் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டோம். எஸ். பிரதீபன், என்.புஷ்பராஜா ஆகியோரை இதற்காக நியமித்தோம்" என்றார் செய்தி ஆசிரியர் குமாரதாஸன். "செய்தியாளர் சுந்தரலிங்கம், நெல்லியடியிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி ஸ்தலத்தின் நிலைமைகளை உடனுக்குடன் தரமுயன்றுகொண்டிருந்தார். தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தில்லை நாதனும், சுந்தரலிங்கமும் தாம் சேகரித்த செய்தி களுடன் உதயன் பணிமனைக்கு வருவதற்காக நீண்டநேரம் பஸ்ஸீக்குக் காத்திருந்தனர். பஸ் சேவைகள் அனர்த்தத்தையடுத்து பாதை மாற்றங்களுக்கு உட்பட்டிருந்ததால் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வந்து சேர்ந்தனர். அக்கட்டத்தில்தான் எமது போக்கு வரத்து, தொலைத்தொடர்பு முறை ஓர் அனர்த் தத்தால் செய்தி வழங்கலுக்குப் பொருத்தமில் லாமல் உள்ளதையும் ஒரு சிறிய குடாப் பகுதியான யாழ்ப்பாணப் பிராந்தியத்திலேயே சாத்தி யமில்லாமல் போவதையும் உணரமுடிந்தது" என்றும் அவர் மேலும் சொன்னார். உங்கள் வழமையான கடமையொழுங் கிலிருந்து எவ்வாறான மாற்றங்களை மேற் கொண்டிருந்தீர்கள் என்று பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "முழுமையான அசாதாரண சூழ் நிலையைக் கருதி அனைத்து ஊழியர்களது லீவுகளையும் இரத்துச் செய்தோம். பாதிக்கப்பட்ட உறவினர்களைப் பார்வையிடச் செல்லும் ஊழியர்களுக்கு லீவு அனுமதித்தோம். எமது நிர்வாக நடவடிக்கைகளுக்கு அப்பால் 26, 27, 28,ஆம் திகதிகளில் எமது ஊழியர்கள் அனை வரும் இரவு, பகல் பாராமல் கடமையுணர்வோடு பணியாற்றினர்" என்று கூறினார் அவர். செய்திகளை எவ்வாறு கையாண்டீர் கள் என்று குமாரதாஸனிடம் கேட்டேன்- "ஆரம்பத்தில் திகைப்பு, குழப்பம் என்பன செய்திகளைக் கையாள்வதில் இருந்தாலும், இதனைச் சுதாகரித்துக்கொண்டு அவ்வாறான திகைப்புகள், குழப்ப நிலைகள் எமது செய்தி வழங்கலில்பிரதிபலித்துவிடாதபடி இது ஒரு தேசிய அனர்த்தம் என்பதனால் நன்றாகச் செய்யவேண்டும் என்று தீர்மானித்து எமது மனநிலைகளைத் திடப்படுத்திக்கொண்டு வேலை செய்தோம்...." என்றார்அவர். "1985ஆம் ஆண்டு நவம்பரில் நிறுவப் பட்ட உதயனின் பணி இரண்டு தசாப்தங்களைத் தாண்டிச் செல்கிறது. ஆனால், எமது காலத்தில் இப்படியோர் இயற்கை அனர்த்தத்தைச் செய்தியாக்கும் அனுபவம் இதுவே முதற்றடவை. இலங்கை செய்தி ஊடகங்களுக்கும் இதுவே முதல் அனுபவம்" என்று சுட்டிக்காட்டினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன். போர் அனர்த்தமும் இராணுவ அட்டூழியமும் பற்றிய செய்திகளை நாளாந்தம் உடனுக்குடன் சூட்டோடு சூடாகப் பிரசுரித்த அனுபவம் எங்களுக்கு (உதயனுக்கு) உண்டு. ஆனால், சுனாமி சொல்லாமல் கொள்ளாமல் கொடுவினையாக வந்து ஒரு சிலமணி நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தியதால் அதன் செய்திக் கனதி பல மடங்காக இருந்தது. ஓரே நாளில் முழுப் பாதிப்புகளுக்கும் உடனடியாகப் பிரசுரம் தரமுடியவில்லை. செய்தியாளர்களால் ஒரே நாளில் ஒரே சுமையாகக் கொண்டு வரமுடியாமற் போயிற்று. அது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல என்பதே எனது கருத்து. மக்கள் இன்னலுற்று ஓடித் திரிந்த அன்று விசேட பதிப்பு வெளியிடுவது பொருத்தமற்றதுமாகும் - என்றார் அவர். தங்கள் பணியாளர்கள் யாராவது நேரடியாகச் சுனாமியால் பாதிக்கப்பட்டுள் ளார்களா என்று கேட்டு முடிப்பதற்குள்.... "மாயவர் என்று நாங்கள் சொல்லுகிற முத்துக்கிருஷ்ணர் அற்புததேவன் யாழ்ப்பாணத் தில் எஞ்சியிருந்த திறமைவாய்ந்த ஒரேயோர் அச்சியந்திரத் திருத்துநர். நண்பகலோ நடுச் சாமமோ என்று பாராமல் எங்கள் அச்சியந்திரங் களுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஓடோடி வருபவர். உதயனின் இடதுகரமாக இருந்தவர் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அவர் குடாநாட்டில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அச்சியந்திரம் திருத்தும் பணியில் மிகவும் உதவியாக இருந்தவர். அவரை உதயனின் முழுநேர ஊழியராகக் கருதி அவருக்கு மாதச் சம்பளம் வழங்கிவந்தோம். அவர் எங்கு நின்றாலும் இல்லாவிட்டாலும் இயந்திரக் கோளாறினால் உதயன் இடப்படுகின்றான் என்றால், உடனே வந்து சேர்ந்துவிடுவார். வன்னிக்குக் கூடச் சென்று அச்சியந்தி ரங்களின் பழுதுகளைத் தீர்ப்பவர். அவர் தனது இரண்டு மகன்மாருடன் சுனாமி அலையால் அள்ளிச் செல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை எமது வலிகாமம் வடக்குச் செய்தியாளர் திரு.குகநேசன் எமக்கு அறிவித்தபோது அதிர்ந்துபோனோம். கீரிமலைக்குத் தமது தாயாரின் அந்தியேட்டிக் கிரியைகளை நிறை வேற்றுவதற்குச் சென்றிருந்த அவரும் அவரது பிள்ளைகளும் உறவினர்களுமாக மொத்தமாக 17 பேர் கீரிமலைக் கடலினால்அள்ளிச் செல்லப்பட்ட னர். மாயவரின் இழப்பை ஈடுசெய்வது மிகக்கடினமாக உள்ளது. அவருக்குத்தான் எமது அச்சியந்திரங்களின் நோயும் குணங்குறிகளும் வரலாறும் தெரியும். எந்தப் பிணியானாலும் அவர் உடனே கண்டறிந்து தீர்த்துவிடுவார். அவர் தனது தந்தையிடம் கற்றறிந்த கலை அது. அவரது இழப்பையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு உதயனின் இருநாள் வெளியீடுகள் சற்றுப் பிந்தின. ஏற்பட்ட அச்சியந்திரக் கோளாறு மீண்டும்எமக்குச் சுனாமியை ஞாபகப்படுத்தியது. எனினும், மாற்றுவழிக்காக முயற்சிக்கின்றோம்" என்று தெரிவித்தார். பிரதம ஆசிரியர் கானமயில் நாதன் அவர்கள். செய்திவழங்கும் பணிக்கும் அப்பால் சென்று உதயன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டமை பற்றி பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக உதவவேண்டும் என்று எண்ணினேன். எங்கள் பத்திரிகை மக்களின் பத்திரிகை. அவர்கள் இன்னலுற்றிருக்கும்வேளை யில் நாம் உடனடி உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் `உதயன் சுனாமி நிவாரணப்பணிக் குழுவை' எமது நிர்வாக இயக்குநர் திரு.ஈ.சரவணபவனின் ஊக்குவிப்புடன் அமைத் தோம். எமது சந்தைப்படுத்தும் பகுதி, விளம்பரப் பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்களை உடன் உதவும் பணியில் ஈடுபடுத்தினோம். அவர்கள் பலரும் இளவயதினர். இரவு, பகல் பாராது ஓடியோடி உழைத்தார்கள். எமது சொந்த மக்கள் பாதிப்புற்றிருக்கும்போது நாம் உடனடியாக முந்திக்கொண்டு உதவவேண்டும் என்ற மனித நேயம் அவர்களிடம் மிகுதியாக இருந்தது. எங்கள் சந்தைப்படுத்தல் முiகாமையாளர் சுரேஷ் தமது அணியினருக்கு உஷார்கொடுத்து மக்களுக்கு உதவுவதில் களைக்காமல் உழைத்தார். முதல் மூன்று நாள்களுக்கு இடம் பெயர்ந்த - பாதிக்கப்பட்ட - மக்கள் வாழும் முகாம் களில் சமைத்த உணவுப் பார்சல்களை வழங்கி னோம். உதயன் நிவாரணப் பணிக்கு உதவுமாறு மக்களிடம் பத்திரிகை மூலம் வேண்டுகோள் விடுத்தோம். எதிர்பாராத அளவுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுப் பொருட்கள், உடுதுணிகள், பால்மா வகைகள், பிஸ்கிட் பெடடிகள் முதலியன வந்து குவிந்தன. சிலர் மூடை மூடையாக அரிசி, மா முதலியவற்றை வழங்கினர். மருந்து வகைகளை நாம் கொள்வனவு செய்து வழங்கினோம். எம்மால் இயன்றளவு நிவாரணப் பொருள்களைச் சேகரித்து வழங்கி னோம். 26ஆம் திகதியிலிருந்து மூன்று வாரங்களுக்கு உதயன் நிவாரணப் பணி தொடர்ந்தது....." என்று விளக்கினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அவர்கள். உதயன் சுனாமி அனர்த்தம் தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில உளவியலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்களே என்று செய்தி ஆசிரியர் குமாரதாஸனிடம் கேட்டேன். "உளவியலாளர்களின் நிலைப்பாடு வேறு. செய்திகளை விடப் படங்களுக்கு ஊடாகவே தான் அழிவின் பரிமாணத்தை முழுமையாகக் கொண்டுவரமுடியும். இது ஒரு மாபெரும் மனிதப் பேரழிவு. இந்த அழிவின் மொத்த அளவில் 15 வீதத்தைக்கூட எமது கமெராக்கள் உள்வாங்கவில்லை. 85 வீதம் எம்மால் எவ்வித பதிவுகளுக்கும் உள்வாங்காமலே நடந்துமுடிந்த சோகமாகப் பேசப்பட்டு மறந்துவிடப் படும். அந்நிலையில், நடந்துமுடிந்த பேரனர்த் தத்தின் சாட்சியாக நாங்கள் படங்களைப் பிரசுரித் துத்தான் ஆகவேண்டும். படங்களைப் பிரசுரித் ததையிட்டு எமக்குத் திருப்தியே. இதில் அறவியல், ஒழுக்கவியல் என்பது எமது தீர்மானம், ஒப்பீட்டு அடிப்படையில் எந்தவகையில் சமூகத்துக்கு உதவப் போகிறது என்பதைப் பொறுத்தே! "அந்த வகையில் தான் உளவியல் அணுகுமுறைகளையும் எமது தீர்மானங்களையும் பார்க்க வேண்டும். இறந்தவர்களை, யாராவது அவர்களின் உறவினர்கள் அடையாளம் காண்ப தற்குக் கூட பத்திரிகைகளில் வெளிவரும் படங்கள் உதவியுள்ளன. என்ன நோக்கத்துடன் நாம் படங்களைப் பிரசுரிக்கின்றோம். என்பதில் விளைவு கள் தங்கியுள்ளன....." என்று மிகத் தீர்மானகர மான கருத்துகளை வெளியிட்டார் அவர். ஆற்றுப்படுத்தல் அணுகுமுறைகளுக்கு உங்கள் பத்திரிகை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றவகையில் கருத்துகள் உருவாகிவிட மாட்டாதா என்று வினவினேன். "இல்லை உருவாகமாட்டாது. இங்குள்ள சகல உளவியல் நிபுணத்துவ ஆற்றுப்படுத்தல் செயன்முறைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங் குகின்றோம். அவற்றுக்கு எமது பத்திரிகையில் போதியளவு இடம் ஒதுக்கிக்கொடுக்கின்றோம். உதாரணத்துக்கு, அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுப்படுத்தல்செயற்பாடுகளைப் பற்றிப் பல விடயங்களைப் பிரசுரித்திருக்கிறோம்........ இப்போதும் கூட அந்த உதவியைச் செய்வோர் குறித்து வெளிப்படுத்தி வருகிறோம் என்று விளக்கினார் பிரதம ஆசிரியர். இயற்கை அனர்த்தம் தொடர்பான நிபுணத்துவ விடயங்களையிட்டு கருத்துகளைப் பெற்றுப் பிரசுரிப்பதற்காக யாரையெல்லாம் அணுகினீர்கள் என்று பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "புவியியல் சார்ந்த அறிஞர் என்றவகை யில், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அணுகினோம். கொழுப்பிலிருக்கும் புவிச்சரிதவியல் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு பல அறிவியல் விளக்கங்களைப் பிரசுரித்தோம். இவ்வாறான நிபுணத்துவ விடயங்களைப்

க. வேல்தஞ்சன்

0 Comments:

Post a Comment

<< Home